Madura Veeran Song Lyrics - Viruman Movie

 குழு : ………………….

பெண் : ஏய் மதுர வீரன் அழகுல
மாட்டு கொம்பு திமிருல
பாவி நெஞ்சு சிக்கிக்கிருச்சே….ஏ…..

ஆண் : வாடி என் கருப்பட்டி
பாத்தா பத்தும் தீப்பெட்டி
மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே…ஏ…..

பெண் : மாருல ஏறிட எடம் தா
மீசைய நீவுற வரம் தா
உடுத்துற வேட்டிய போல
ஒட்டிகிட்டு வர போறேன்டா
ம்ம் வர போறேன்டா
உன் கூட வரேன்டா
உன் கூட வரேன்டா

ஆண் : தேனீ மொத்தம் பாக்கத்தான்
தங்கமே உன்ன தூக்கித்தான்
மொத்த தேனைத்தான்
நான் மொண்டு ஊத்தவா

பெண் : ஊரே கண்ணு போடத்தான்
மாமன் ஒன்ன கூடித்தான்
புள்ளை நூறுதான்
நான் பெத்து போடவா

ஆண் : கொடை சாஞ்சேனே…..
கொம்பன் நான்தானே
கொடமாக்கி கருவாச்சி
ஒருவாட்டி என்னை தூக்கி போயேன்டி…ஈ….

ஆண் : ஒன் கூட வரேன்டி….
ஒன் கூட வரேன்டி…..
ஒன் கூட வரேன்டி….
ஒன் கூட வரேன்டி…..

பெண் : மாமன் கண்ணு சூரியே
ஈர கொலை ஏறியே
எதமா என்னை குத்திக் கொல்லாதே…ஏ….

ஆண் : ஏ….எஹ் ஹே ஆந்தை முழி காரியே
அருவாமனை மாரியே
சொகமா என்னை வெட்டி தள்ளாதே

ஆண் : ஹ்ம்ம்…..ஒ….சேலை முந்தி ஓரமா
ஆத்தா தந்த வாசமா
உள்ள காலம்தான் உன்ன நெஞ்சில் தாங்குவேன்

பெண் : மாமன் நெஞ்சில் மேலதான்
ஆட்டுக்குட்டி போலத்தான்
நெத்தம் தூங்கத்தான்
பத்து ஜென்மம் வாங்குவேன்

ஆண் : எடி பேச்சியே…..என்னை சாட்சியே
என்னை மாத்தி புதுசாக்கி
உசுராக்கி உன் கையில் தாரேன்டி…ஈ….

ஆண் : ஒன் கூட வரேன்டி….
ஒன் கூட வரேன்டி….
நான் கூட வரேன்டி…..
நான் கூட வரேன்டி…..

ஆண் : ஒன் கூட வரேன்டி….
ஒன் கூட வரேன்டி….
நான் கூட வரேன்டி…..
நான் கூட வரேன்டி…..


இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா, அதிதி சங்கர்

பாடலாசிரியர்: ராஜா முருகன்

Post a Comment

0 Comments

Recent, Random or Label